4 Sept 2021

பெருநகரத்துப் பெருவனம்

பெருநகரத்துப் பெருவனம்

ஒரு நொடி இதயம் நின்றதை

உணர முடிந்தது

ஒட்டு மொத்த உலகம்

ஸ்தம்பித்ததாய்த் தோன்றியது

உலகம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது

உதிரும் இலைகளை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர

மரத்தால் என்ன செய்து விட முடியும்

கடைசி இலை உதிர்ந்து பட்டுப் போகும் போதும்

தனக்குத் தானே தண்ணீர் ஊற்றிக் கொள்ள முடியாது

அலுப்பு சலிப்பின்றி நிற்கும் மரம்

வேர்களைத் துழாவி விட்டுப் பார்க்கலாம்

அக்கம் பக்கம் கிளைகளை நீட்டிப் பார்க்கலாம்

அதிகபட்சம் ஓரடித் தாண்டி முன்னே வைத்து விட முடியாது

பறவைகளும் பூச்சிகளும் வருவது நின்ற பிறகும்

கறையான வந்து அரிக்கும் வரை

மரம் நின்றாக வேண்டும்

என்னதான் செய்வது

பெருநகரத்தில் பெருவனமாகி விட்ட

முதியோர் இல்லத்தில் நிற்கின்ற

முது மரங்கள் பல்லாயிரம்

*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...