18 Apr 2021

அதற்குப் பின் தண்டிக்கப்படுவீராக

அதற்குப் பின் தண்டிக்கப்படுவீராக

குழந்தையை அடிக்கும் தாய் ஒருத்தி

வலிக்க வலிக்க சுமந்து பெற்றவள்

அந்த அடிகள் உம் இதயத்தில் விழாது இருப்பதற்காக

தடுக்க முற்படுவீரோ

மனசுக்கு வேடிக்கையாக இருக்கிறது என்பதற்காக

ரசிக்க ஆட்படுவீரோ

அடிபட்ட பின் குழந்தை

அதை மறந்து சிரிக்கும் போழுதில்

நிச்சயம் நீர் தண்டிக்கப்படுவீர்

அந்த அடிகளை உம் முதுகில் வாங்காததற்காக

அத்தாயின் இயலாமையைப் பகிர்ந்து கொள்ளாததற்காக

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...