11 Apr 2021

அச்சமூட்டுவதற்காக மன்னியுங்கள்

அச்சமூட்டுவதற்காக மன்னியுங்கள்

என் கவிதைகள் அச்சமூட்டுவதற்காக

என்னை மன்னியுங்கள்

இறுதியில் நிகழப் போவதை

முதலில் காட்டுவது ஒரு நல்ல கவிதையா என கூறுங்கள்

சொற்களின் ஊடே அர்த்தத்தைத் தேடி

களைத்துப் போனவர்களிடம் ஒன்று கேட்கிறேன்

சொற்களின் ஊடே கிளைத்த

உங்கள் உணர்வைக் கிள்ளிப் போட்டது எது

நீங்கள் சிக்கலானவர்கள் என்பதை மறுக்கிறேன்

பணத்துக்காக பகட்டுக்காக

பல தலைமுறை சுயநலத்துக்காக

குழம்பி நிற்பதை அறிவென்பதை எதிர்க்கிறேன்

நீங்கள் ஒரு மனநோயாளி அல்ல என்பதை

எப்படி மறுக்க முடியும்

ஒரு கருத்துக்காக ஆயுதம் ஏந்தி வரும் உங்களை

ரட்சகர்கள் என்றால் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்

என்ன நான் தவறாகச் சொல்லி விட்டேன்

எனது பயம் எனக்கானதன்று

உங்களுக்கானது உங்கள் தலைமுறைக்கானது

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...