28 Oct 2020

மரத்துக்குத் திரும்பாத இலை

மரத்துக்குத் திரும்பாத இலை

இலை மரத்தோடு இருக்கிறது

சருகாகிப் பிரிகிறது

காற்றில் அலைபாய்கிறது

மண்ணோடு மண்ணாகிறது

புழுக்களுக்கு உணவாகிறது

ஒரு போதும் மரத்துக்குத் திரும்பாத இலை

*****

பன்றிகளென ஓடுங்கள்

குண்டு விழும் போது

குப்பைக் குழிகளை நோக்கி ஓடுங்கள்

பன்றிகள் அதைத்தான்

செய்து கொண்டிருக்கின்றன

வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது

***** 

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...