30 Oct 2020

தப்புத் தாளங்கள்

தப்புத் தாளங்கள்

பயந்து கொண்டுதான் தவறுகள் நிகழ்கின்றன

துணிந்தால் தவறலாமா என்று கேட்காதே

துணிந்த பின் தவறு செய்யத் தோன்றாது

மனபயத்துக்காக

எவ்வளவு துணிந்து செல்வார்கள் என்பதைக்

கணிக்க முடியாது

அவர்களின் பயத்துக்குக் காரணம் இருந்தது

செயல்களுக்குக் காரணம் இல்லை

பயத்தில் நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்க வேண்டும்

மென்மேலும் பயம் விதைக்கப்பட்ட போது

பயந்து பயந்து பயத்தில் மேலும்

துணிந்து சென்றார்கள்

அந்தத துணிச்சல் ஆபத்தானது என்று

பயம் காட்டியவர்களுக்குத் தெரியவில்லை

பயமுறுத்துவது வசதியாய் இருக்கிறது

அவர்களுக்கான ஆபத்தும் அடங்கியிருக்கிறது

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...