11 Aug 2020

நடையைத் தந்தவர் நன்றிக்குரியவர்

நடையைத் தந்தவர் நன்றிக்குரியவர்

எனக்குப் பதிலாக

இரு சக்கரங்கள் ஓடுவதை

இரு சக்கர வாகனம் என்கிறார்கள்

எனக்குப் பதிலாக

நான்கு சக்கரங்கள் சுழல்வதை

மகிழ்வுந்து என்கிறார்கள்

எனக்குப் பதிலாக

துடுப்பு அசையாமல் நீந்தும் அதை

கப்பல் என்கிறார்கள்

எனக்குப் பதிலாக

அசையாத றெக்கைகளால்

காற்றில் பறக்கும் அதை

விமானம் என்கிறார்கள்

என் கால்கள் சக்கரங்கள் றெக்கைகள் துடுப்புகள்

இயந்திரங்களிடம் இருக்கின்றன

சக்கரங்கள் எனக்காகச் சுழல்கின்றன

எனக்காக நான்கு கால்களால் நிற்பதை

நாற்காலி என்கிறார்கள்

கால் முளைத்த என் நாற்காலியை

சக்கர நாற்காலி என்கிறார்கள்

சக்கரங்கள் எனக்காகச் சுழல்கின்றன

சக்கரங்களைக் கண்டுபிடித்தவர்

நன்றிக்குரியவர்

நடக்காத கால்களுக்கு

நடையைத் தந்தவர் அவர்

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...