29 Nov 2019

17.4



            ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழய்யா கல்வியைக் குறித்துப் பேசுகிறார். இரண்டாவது கூட்டத்தில் ஐயா கல்வியைக் குறித்துப் பேசியதான குறிப்புகள் வருமாறு,

            ஐயா முதலில் முயற்சியைக் குறித்துத் துவங்குகிறார்.
            வாழ்க்கை ஒரு பயணம்
            பயணத்தில் எடுத்து வைக்கும் அடிகள் ஒவ்வொன்றும் முயற்சிகள்
            முயற்சியில் ஊக்கம் ஓர் உந்துதல்
            ஊக்கத்தின் வீரியம் முந்துதலுக்கு வழி
            முந்துதலே வெளிச்சம் விடிவெள்ளி
            அனுபவம் ஒவ்வொன்றும் முயற்சிக்கு அடித்தளமாகிறது
            முயற்சியில் செய்யும் பயிற்சியே செயலுக்கு வடிவம் கொடுக்கிறது
            பயிற்சியின் முதிர்ச்சி வாழ்க்கைக்கான திறவுகோல்
            திறவுகோல் வருங்காலத்தை வசந்தகாலமாக ஆக்குகிறது
            உலகில் இரண்டு விதமான நபர்கள் இருக்கிறார்கள்
            அலுத்துக் கொள்பவர்கள் ஒரு வகை
            அயராது முயல்பவர்கள் இன்னொரு வகை
            முயற்சியை உள்வாங்கியவர் முள்வாங்கியாகிறார்
            முயன்றவர் படிகட்டுகளில் ஏறுகிறார்
            முயலாவர் அடியில் தவழ்கிறார், வாய்ப்புகளை நழுவ விடுகிறார்.
ஐயா, இரண்டாவதாக கல்வியின் ஆணிவேரைத் தேடி அதை அலசுகிறார்.
            மனம் இன்பத்தை நாடும். துன்பத்தை வெறுக்கும்.
            இன்பத்தில் புன்னகை
            துன்பத்தில் கண்ணீர்
            இஃது உலக நியதியாகும்
            வாழ்க்கையின் வேட்கை என்னவென்று நினைக்கிறீர்கள்
            அது தேடல்
            தேடுவது கிடைக்கும்
            இருட்டில் தேட முடியாது
            இருட்டு என்பது இங்கு இருட்டல்ல, அஃது அறியாமை
            இருட்டின் தேடல் வெளிச்சம், அஃது அறிவு
            ஒளியில் பொருட்கள் புலனாகின்றன
            சூழ்ந்திருப்பது எல்லாம் இருட்டு
            செயல் விளைவுகளைத் தருகிறது
            ஊசித் துணியைத் தைக்கிறது
            கத்திரிக்கோல் தைத்த துணியைப் பிரிக்கிறது
            என்றாலும் இரண்டுமே வடிவமைப்புக்கு அடிப்படை
            மன வடிவமைப்புக்கு கல்வி அடிப்படை
            பிறக்கும் போது அழும் அழுகை கல்வியின் தொடக்கம்
            இறப்பின் அழுகை அதன் முற்றுப்புள்ளி
            தாக்கங்கள் நம்மை கல்விப்புலன்களாய் இருந்து வழிநடத்துகிறது
            கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது
ஐயா கட்டுரையின் சாராம்சத்துடன் பேசுகிறார். எழுதிய நாவலாசிரியர் அதைக் கவிதை போன்ற வடிவமைப்பில் கொண்டு வந்து விடுகிறார் இல்லையா! பேச்சுக்கும் எழுத்துக்கும் நேரும் அவலம் இது! வடிவம் ஒன்று வந்ததற்காக வாசகர்கள் மகிழ வேண்டும்.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...