28 Nov 2019

17.3



            மொத்த மக்கள்தொகை நூறு என்றால் கவிஞர்கள் மொத்தம் நூற்று பத்துப் பேர் இருப்பார்கள் புனைப்பெயர்களைச் சேர்த்து. கவிதை எழுதாமல் நேரடியாக எழுத்தாளர்களாக அவதரித்தவர்கள் சொற்பம்.

            நாடு - வீடு - காடு - ஓடு என்ற நான்கு சொற்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கவிதையை உருவாக்கி விடலாம்.
            உதாரணத்திற்கு இப்படி,
            நாட்டைக் காப்போம்
            நலமுடன் இருப்போம்
            வீட்டைக் காப்போம்
            வீரர்களாய் இருப்போம்
            காட்டைக் காப்போம்
            கண்ணியவான்களாய் இருப்போம்
            ஓட்டைக் காப்போம்
            ஒற்றுமையாய் இருப்போம்.
கட்டுரை அப்படியன்று. கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சிறுகதை இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நாவலுக்கு ரொம்பவே மெனக்கெடல் அதிகம். கவிதை எழுதி ஒரு நம்பிக்கை பிறந்து விட்டால், அங்கே இங்கே என்று வரிகளைப் பிய்த்துப் போட்டு மேற்கோள் காட்டி விட்டு கட்டுரையைத் தயார் செய்து விடலாம். கட்டுரையில் ஆங்காங்கே சில பெயர்களைத் தூவி விட்டு, இரட்டை மேற்கோள் குறிகளைச் செருகி விட்டால் சிறுகதை தயார் ஆகி விடும். ஒரு கதையாய் ஓடும் சிறுகதைக்குள் நான்கைந்து கிளைக்கதைகளைப் புகுத்தி விட்டால் சுடச் சுட நாவல் தயார்.
            ஓர் எழுத்தாளர் ஆவது சுலபம். அதை விடச் சுலபம், எதையாவது படம் பிடித்துப் போட்டு ஒரு காணொலிக்கான இயக்குனர் ஆவது. விருப்பம் அவரவரைப் பொருத்தது. மொத்தத்தில் உங்களை ஒரு கவிஞராய் ஆக்கியதில் இந்த நாவலுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதை உங்களால் மறுக்க முடியாது. நீங்கள் உங்கள் வருங்கால எழுத்தில் அதைக் குறிப்பிடுவீர்கள் என்று நாவலாசிரியர் நம்புகிறார்.
*****


No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...