30 Sept 2019

வாழ்க்கையின் ஏழு அதிசயங்கள்



            வாழ்க்கையில் இன்னும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அநத அதிசயங்களைப் பட்டியல் போட்டால்...
            1) எங்கள் ஊர் பெட்டிக்கடைக்கார அண்ணாச்சி இன்னும் லேண்ட் லைன் போன்தான் வைத்திருக்கிறார். அதிலே பேசி அதிலே எல்லாவற்றையும் முடித்து விடுகிறார். ஏன் அண்ணாச்சி இன்னும் கைபேசி வாங்கவில்லை என்றால், அதெல்லாம் நமக்கு எதுக்கு தம்பி? என்கிறார்.
            2) அமேசான் காட்டு தீப்பிடித்து அழிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். நம் சொட்டைத் தலை நண்பர் இன்னும் எப்படி அமேசான் காட்டிலிருந்து தயாராகி வந்து கொண்டிருக்கும் தைலத்தை வாங்கித் தடவிக் கொண்டிருக்கிறார்.
            3) ஏன் நண்பா! நான் துணி துவைக்கும் போது மட்டும் மழை வருகிறது என்றேன். நான்கு மாதத்துக்கு ஒரு முறை ‍துவைத்தால் அப்படித்தான் வரும். இனிமேலாவது தினந்தோறும் துவைத்துக் கட்டு என்கிறான்.
            4) டீக்கடையில் உட்கார்ந்து பேசும் போது சூடாக இருக்கிறது. வீட்டுக்கு வந்ததும் ஆறி விடுகிறது அரசியல்.
            5) எவ்வளவுதான் அதிசயத்தைத் தேடினாலும் அமைதிதான் அதிசயம். ஏதாவது ஒன்று நடந்து விடாதா? தொழிலில் மாற்றம் - பிள்ளையின் படிப்பில் மாற்றம் - குடும்பத்தில் மாற்றம் - குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு - வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை - இப்படி ஏதாவது? அப்படி அது நிகழ்ந்த பின் அடுத்து மனசு தேடுவது அமைதியைத்தான். எல்லாம் நடந்து விட்டதே! மனம் அமைதியாக இருக்க வேண்டியதுதானே! இருக்காது. ஆகவேதான் எவ்வளவுதான் அதிசயத்தைத் தேடினாலும் அமைதிதான் அதிசயம்.
            6) கடவுள் வந்திருக்கிறார். சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் போய் விட்டது.
            7) தண்டனைகள் இல்லை என்று சொல்லாதே. அளவுக்கு மீறித் தின்றவன் சுகர் வந்து அலைகிறான். அளவைத் தாண்டுபவன் அனுபவித்துச் சாவான்.
*****

No comments:

Post a Comment

பயணியருக்கும் பயண உரிமை உண்டு!

பயணியருக்கும் பயண உரிமை உண்டு! தொடர்வண்டி முன்பதிவுகளை இப்போது நன்றாகவே கண்காணிக்க முடிகிறது. அதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் உண்டாகி விட...