30 Jul 2019

கழிவுகளால் ஆகிய நான்...



வியாதி தீர்த்த மருந்து பாட்டிலை
குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டியிருக்கிறது
காயம் ஆற்றிய பஞ்சை
காயம் ஆற்றக் குத்திய ஊசியை
குப்பைத் தொட்டியில் போட்டு
காயம் ஆற்ற உட்செலுத்திய மருந்தையெல்லாம்
மலமாய் கழிவறையில் கழிக்க வேண்டியிருக்கிறது
குப்பைத் தொட்டிகளை நிரப்பிய பிறகு
கழிவறையை நிரப்பிய பிறகு
குணமாகி வெளிவருகிறேன் என்று
அறிவிக்க வேண்டியிருக்கிறது
நலம் பெற பிரார்த்தித்தவர்கள்
மாலையோடு நிற்கிறார்கள்
வாடிய பிறகு குப்பைத் தொட்டியில்
வீச வேண்டும்
பாவம் குப்பைத் தொட்டிக்கு அதிக வேலை
*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...