5 Apr 2019

பாதிச் செத்த உடலின் குரல்


பாதிச் செத்த உடலின் குரல்
ஏறிச் சென்ற ஊர்திக்கு இரக்கமில்லை
பாதிச் சாகடித்துச் சென்று விட்டது
வலியைப் பாதி மிச்சம் வைக்க முடியாமல்
கண்ணீரைப் பாதிக் குறைத்துக் கொள்ள முடியாமல்
உயிர் வாதையின் அரைப் பாகத்தை
உதறித் தள்ள முடியாமல்
இரண்டு மடங்காய்க் கத்துபவனின் குரல்
வெளியெங்கும் நிறைகிறது
இரவு இயல்பாய் வருகிறது
நிலவு எட்டிப் பார்க்கிறது
நட்சத்திரங்கள் நாசுக்காய்ப் பூக்கின்றன
இன்னும் பாதிச் சாகடிக்க வரும்
ஊர்திக்காகக் காத்திருக்கிறது உடல்
வேதனைப் புரியாத உயிர்
பிழைத்து விடும் சாமர்த்தியத்தினாலான
நம்பிக்கையின் சிற்றிழையால்
பெருஞ்சுமைத் தூக்கி விடத் துடிக்கிறது
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...