4 Apr 2019

நாக்குத் தொங்கிய நாய்


நாக்குத் தொங்கிய நாய்
பசியார வந்த வயிறு
வயிற்றை அறுத்து ருசியாக்கி விட்டாய்
கண்ணாரக் காண வந்த கண்கள்
கண்களைக் குத்திப் பார்த்து விட்டாய்
நெஞ்சார தழுவ வந்த கரங்கள்
கரங்களை வெட்டிக் கட்டிக் கொண்டு விட்டாய்
புதைத்தாலும் முளைக்கும்
எரித்தாலும் புகையாய்ப் பிறக்கும்
வன்மங்களுடன் பிறந்த விட்டாய்
இறப்பைப் பரிகாசம் செய்யும் வாய் உனக்கு
உன் கால்கள் எட்டி உதைக்கும் நாய் என்றானப் பின்
நாயின் நான்கு கால்களால் செய்த சூப்பை
நன்றாய்க் குடிப்பாய்
ஆட்டுவதற்கு வாலை மட்டும் மிச்சம் வை
அனிச்சையாய் ஆட்டிப் பழகி
ஆடப் பழகி விட்ட காலற்ற நடனங்களைக்
குசும்புடன் ரசித்துப் பார்ப்பாய்
குரைப்பதற்கான குரல்வளை உன்னிடம் இருக்கிறது
நாக்குத் தொங்கி விட்ட நாய் நான்
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...