4 Mar 2019

மழைக் கவிதை



மழையைக் கேட்டாள் மகள்
மேகத்தைப் பார்த்த போது
பஞ்சு மிட்டாய்க் கேட்டாள் மகள்
அதுவே ஐஸ் கட்டிகளைப் பொழிந்த போது
ஐஸ் கிரீம் கேட்டாள்
நீராகிப் பொழிந்த போது
தண்ணீர் பாக்கெட் கேட்டாள்
வெள்ளமென ஓடிய போது
காகிதத்தில் கப்பல் ஒன்றும்
தப்பித்துச் செல்ல படகு ஒன்றும் கேட்டாள்
நிவாரண முகாமில் அடைபட்டிருந்த போது
‍சோற்றோடு கொஞ்சம்
செல்ல முத்தம் கேட்டாள் மகள்
ஆம் மீண்டும் மழையைக் கேட்டாள் மகள்
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...