21 Feb 2019

தெறி கவிதை


அதுவொரு சட்டம் அதுவொரு நீதி
திருடும் வரை திருடன்
திருடிய பின் தர்மகர்த்தா
நியாயந்தானா இறைவா
அமுக்கும் வரை பிராடு
அமுக்கிய பின் அரசியல்வாதி
நியாயந்தானா பாரத மாதா
லபக்கும் வரை கொள்ளையன்
லபக்கிய பின் கார்ப்பரேட்
நியாயந்தானா நாடுகளின் நாட்டாண்மைக்காரரே
புரியும் வரை ஊழல்
புரிந்த பின் தலைவர்
நியாயந்தானா நல்லரசே
செய்வதெல்லாம் தப்பு
செய்த பின்னே பிழைக்கத் தெரிந்தவர்
நியாயந்தானா நல்லறமே
உன்னால் முடிந்தால்
நீயும் செய் என்றால்
என்னால் முடிந்து
நானும் செய்தால்
உன் சட்டங்களும் நீதிகளும்
ஏன் சும்மா இருப்பதில்லை
*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...