30 Jan 2019

தமிழர்களின் திருமண கலாச்சாரம்


சொர்க்கத்துக்கு ஒரு டோக்கன்
            மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.
            பெண் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். கிடைத்தபாடில்லை.
            இந்த வாசகங்களைக் கேட்காமல் கடக்கும் காதுகள் வாய்த்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். அந்தப் பாக்கியம் தமிழ்நாட்டவர்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.
            தமிழ்நாட்டில் மாப்பிள்ளைகளுக்கா பஞ்சம்? மணப்பெண்களுக்கா பஞ்சம்?
            மாப்பிள்ளைகள், மணப்பெண்கள் இருக்கிறார்கள். சாதிக்கு ஏற்ற மாப்பிள்கைள், மணப்பெண்கள் என்று பார்த்தால் 50 சதவீதம் காலியாகி விடுவார்கள்.
            மீதி இருக்கும் 50 சதவீதத்தில் ஜாதகத்துக்கு ஏற்ற மாப்பிள்ளைகள் மணப்பெண்கள் என்று பார்த்தால் 30 சதவீதம் காலி.
            மீதி இருக்கும் 20 சதவீத மாப்பிள்ளை மணப்பெண்களில் அரசாங்க வேலை என்று ஒரு சல்லடையைப் போட்டு சலித்தால் 10 சதவீத மாப்பிள்ளைகள் மணப்பெண்கள் காணாமல் போய் விடுவார்கள்.
            மீதி இருக்கும் 10 சதவீத மாப்பிள்ளை மணப்பெண்களில் மாமியார், மாமனார், நாத்தனார் - கூட்டுக் குடும்பம் என்று டபுள் பில்டர் காபியைப் போட்டால் 10 சதவீதமும் காலி.

            மிச்சமிருக்கும் 0 சதவீதத்தில்தான் மாப்பிள்ளை, மணப்பெண் எல்லாம் பார்க்க வேண்டும். அதெப்படி 0 சதவீதத்தில் அதைப் பார்க்க முடியும் என்று கேட்க மாட்டீர்கள். அது பார்க்க முடியும். அதற்கு நீங்கள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள், கல்யாணத்தையெல்லாம் தமிழ்நாட்டில் நிர்ணயிக்க முடியாது! சொர்க்கத்தில்தான் நிச்சயிக்க முடியும் என்று? நம் முன்னோர்கள் முட்டாள்களா என்ன?!
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...