4 Jan 2019

சொல்லுங்கள் அன்பர்களே


சொல்லுங்கள் அன்பர்களே
பிரச்சனைகளைப் பகிர்வதா வேண்டாவா
இரக்கம் காட்டுவீர்கள்
அன்பு செய்வீர்கள் என்றுதானே பகிர்கிறேன்
நீங்களோ பலவீனத்தை அறிந்து விட்டதாக மகிழ்கிறீர்கள்
எதிர்பார்த்த அன்பிற்கும், இரக்கத்திற்கும் மாறாக
நிலைமை பரிதாபமாக மாறிய பின்
அதற்கு முன்பிருந்த நிலைமையே மேல்
என்பதாக ஆகி விடுகிறது
இப்போது சொல்லுங்கள்
பிரச்சனைகளைப் பகிர்வதா வேண்டாவா
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...