29 Dec 2018

ஒரு நாள் செய்தித்தாள்


அன்று ஒரு நாள் செய்தித்தாள் பார்த்தேன்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு சம்மன்
44 பேரை உயிரோடு எரித்த வெண்மணித் தியாகிகள் தினம்
நிலுவைத் தொகைக் கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
ஆசிரியர்கள் நீர் அருந்தாப் போராட்டம்
சிலை கடத்தல் வழக்குகளில் மறு விசாரணைக்கு உத்தரவு
கொலை வழக்குக் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளுங்கள் என கர்நாடக முதல்வர் பேச்சு
பேஸ்புக் காதலருக்காக தாயைக் கொன்ற காதலர்
200 டன் குப்பைகளுக்கு அடியில் மீட்டெடுக்கப்பட்ட அரசியல் பிரமுகரின் எலும்புக் கூடு
நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இரத்தக் கவிச்சி அடிக்காததுதான் பாக்கி.
இனி செய்தித்தாள் பார்ப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?
கமெண்ட் பாக்ஸில் போடுங்கள்.
சேர்ந்தே ஒரு முடிவு எடுப்போம்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...