29 Dec 2018

மரணத்தின் ருசி பிடித்த மலர்


மரணத்தின் ருசி பிடித்த மலர்
நிசப்தத்தில் பூத்த மலர்
இரைச்சலில் கிழிந்து தொங்குகிறது
டெசிபல் அதிகரித்தால் இப்படித்தான் என்று
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள்
இப்படி ஒரு மலர் பிறக்கும் என்று அறியாது
காப்பீடு செய்யாமல் விட்டதற்காக
கடிந்து கொள்ளப்படுவதாகிறது
லட்சங்களை விழுங்கப் போகிறது
உயிர் பிழைக்கப் போகும் மலர்
அதிசயமாய்க் காப்பாற்றப்படும் மலர்
சிகிச்சை பலனின்றி இறந்த ஒருவனின்
இறுதி அஞ்சலியில் வைக்கப்பட்ட போது
இறந்தவன் கண்களில் வழிந்த கண்ணீரைத்
தொட்டுச் சுவைத்துக் கொண்டது
பசியோடிருந்த மலர் சொன்னது
மரணத்தின் ருசி மிக பிடித்திருப்பதாக
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...