28 Nov 2018

சந்தோஷமான மனிதர்


சந்தோஷமான மனிதர்
            வரவில்லை என்பதில்லை. வருகிறது. வருவது பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுமா? அங்கீகரிக்கப்படுமா? என்ற சந்தேகம்தான் பிரச்சனை. ஒருவேளை சந்தேகப்பட்ட மாதிரியே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்... அங்கீகரிக்கப்படாவிட்டால்... அந்த பயம்தான் மனதையும், வாழ்வையும் ஒரு சேர ஆட்டிப் படைப்பது.

            வாழ்க்கையில் மனநிறைவைத்தான் தேடிக் கொண்டிருப்போம். தேடிக் கிடைக்கும் பொருளா அது? தேடுவதை நிறுத்தும் போதுதான் கிடைப்பது அது.

            மனநிறைவு என்பது நாம் எங்கிருந்தோமோ, அங்குதான் இருக்கிறது.

            வாழ்க்கையின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கானப் பாடங்கள். முடிவுகளைச் சாத்தியபாடு என்ற நிலையிலிருந்துதான் எடுக்க முடியும். நல்லதே நடக்கும் என்ற நிலையின் அடிப்படையில் எடுப்பதில் நிறைய சங்கடங்கள் இருக்கின்றன.

            கிடைக்கவில்லை என்பதற்காக சந்தோசப்படத் தெரிந்தால் உங்களை விட சந்தோஷமான ஒரு ஆள் இந்த உலகில் இல்லை.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...