15 Nov 2018

கஜா


கஜா 
அரசியல்வாதியாக எல்லாரும் முடியாது. குழப்பவாதியாக எல்லாராலும் முடியும். அதாவது தாங்க முடியலடா சாமி பேட்டிகள் மொமண்ட்!
*****
கஜா புயல் பற்றிக் கேட்கிறார்கள். இப்படி ஒரு குழப்பமானப் புயலைச் சந்தித்து நாளாகி விட்டது.
பொதுவாக குழப்பம்தான் புயல். காற்று எந்த திசையில் வீசுவது என்று குழம்பிப் போய் நான்கு திசையிலும் மாறி மாறி வீசும். அதிசயமாக இந்தப் புயலுக்கு நான்கு திசைகளிலிருந்தும் நானா விதமான கணிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அது கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும் என்கிறார்கள்.
மறுநாள் நாகைக்கு அருகே கரையைக் கடக்கும் என்கிறார்கள்.
நாகையை நோக்கிய பை பாஸ் ரோடுகள் சரியில்லாததால் அவ்வழியே கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்ற வாட்ஸ் அப் பார்வேர்டு ஒன்றைக் கூட பார்த்தேன்.
போகிறப் போக்கைப் பார்த்தால் காவிரியாற்றின் வெண்ணாற்றாங்கரையின் வழியாக கரையைக் கடக்கும் என்று கூட செய்திகள் வரும் போலிருக்கிறது. எங்கள் ஊரின் கம்மாக் கரையில் உட்கார்ந்து இதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
புயலை இவ்வளவு காமெடியாக ஆக்கக் கூடாதுதான்.
இயற்கை எப்போதும் மனிதக் கணிப்பை மீறிச் செயல்படக் கூடியது. மனிதன் கணிக்கக் கூடிய இடங்களில் அது தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துவதை விட, மனிதன் கோட்டை விடும் இடங்களில் தன் சக்தியை பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறது.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...