20 Jul 2018

ஒரு கவிஞனாக இருப்பதன் கையாளாகாதத்தனம்

ஒரு கவிஞனாக இருப்பதன் கையாளாகாதத்தனம்
இந்த எல்லா கவிஞர்களின் கவிதைகளையும்
இன்றே பருகி விடவா?
மிச்சம் வைத்து நாளொன்றுக்கு ஒன்று என
தொட்டுக் கொள்ளவா?
வாசிக்கப்படாமல் அந்தரத்தில்
தொங்கும் கவிதைகள்
மனதுக்குள் படபடக்கின்றன
இதுதான் அந்தக் கவிதை என
மின்னி மின்னி தோற்றம் கொள்கின்றன
எம் மனதுக்குள் வந்து அக்கவிஞன்
எப்படித்தான் எழுதுகிறானோ?
நானொரு புரிதலுக்கு வருகிறேன்
மனதுக்குள் தட்டுப்படும் அக்கவிதை
அக்கவிஞன் எழுதியதோ?
நான் எழுதியதோ?
ஏன்?
நாங்கள் இருவரும் எழுதியதாக
இருந்து விட்டுப் போகட்டும்.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...