26 Apr 2018

மிரண்டுப் போகும் கடவுள்

மிரண்டுப் போகும் கடவுள்
ஆதி காலத்தில் போராட்டம் இருந்தது
அதன் முனையை நசுக்கினார் கடவுள்
பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினான் மனிதன்
மார்க்ஸ் எனும் ராட்சசன் தோன்றி
நசுக்கப்பட்ட முனையில்
இரத்தப் பசை தடவி
இழப்பதற்கு எதுவுமில்லை என்ற
சிறகுகளை ஒட்ட வைத்தான்
பறக்கும் போராளிகளை எதிர்கொள்ள முடியாமல்
சில நூற்றாண்டுகள் பதுங்கிக் கிடந்த கடவுள்
போராளிகள் உள்ள உலகை
தனியார் மயமாக்குவதாக ஆணை போட்டு
தேசநலத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தி
உலக மயமாக்குவதாக அறிவித்து
மார்க்ஸ் மாண்டு விட்டான் எனப்
பிரகடனம் செய்தார்
கடவுள்கள் இல்லாத உலகில்
மார்க்ஸ்கள் பிறப்பதில்லை
கடவுள்கள் உள்ள உலகில்
மார்க்ஸ்கள் முளை விடாமல் இருப்பதில்லை
மூலதனத்தின் இறுதியில்
சில வார்த்தைகள் சேர்வதைப் பார்த்து
மறுபடியும் மிரண்டுப் போனார் கடவுள்
*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...