13 Mar 2018

நடுமண்டை வழி வெளியேறும் தண்டனைகள்


நடுமண்டை வழி வெளியேறும் தண்டனைகள்
பித்தேறி உன்மத்தமாய்த்
திரியும் பொழுதுகளில்
காதலின் தண்டனைகள் வந்தடைகின்றன
குரூரம் அதன் கைகளாக இருக்கிறது
வன்மம் அதன் ஆயுதமாக இருக்கிறது
சிந்தும் அழுகைத் துளிகளைப் பார்த்து
கைதட்டி ரசிக்கிறது
பரிதாபப்படுவது போல
என் பின்னிரவு தூக்கத்தை
உறிஞ்சிக் கொண்டு
நடுமண்டை வழியாக வெளியேறும் போது
இதயத்தில் வலி எடுக்கிறது
சிவப்பு ரோஜாக்கள் சிந்திக் கிடப்பது போல
ரத்தம் பரவிக் கிடக்கிறது
நினைவுவெளி எங்கும்
இது எதுவும் புரியாமல்
திட்டி விட்டுப் போகிறது சனக் கூட்டம்
*****

No comments:

Post a Comment