21 Feb 2018

நம்பிக்கையைக் கொன்ற இரவு

நம்பிக்கையைக் கொன்ற இரவு
ஒவ்வொரு மெழுகுவர்த்தியாய்
அணைந்து கொண்டு வர
இருள் கவ்வுகிறது
தான் ஏற்றி வைத்தது
நம்பிக்கையை என்று
அவள் புலம்பிக் கொண்டிருக்கிறாள்
மெழுகுவர்த்திகளின் பரிதாபக் கண்ணீரை
முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக
இருள் சொல்கிறது
கனவுகள் இல்லாத உறக்கத்தை
இரவைத் தழுவியபடி
உறங்கத் தொடங்குகிறாள்
நம்பிக்கையைக் கொன்ற இரவுக்கு
நன்றி சொல்லியபடி

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...