26 Jan 2018

வழக்கம் & உளைச்சல்

வழக்கம்
ரெளடி கந்தன் மிராட்டுகிறான் என
கதவடைக்கின்றனர் வணிகர்கள்
புகார் கொடுக்கின்றனர்
ரெளடி கந்தன் கைது செய்யப்படுகிறான்
சிரித்துக் கொண்டே ஜீப்பில் செல்கிறான்
வழக்கம் போல்
மாலை மாமூல் வாங்க வருகின்றனர் அவர்கள்
*****
உளைச்சல்
லோனுக்காக
பத்து முறை அலைந்து பார்த்த
அப்புக்குட்டி
அஞ்சு காசு வட்டிக்குக் கொடுக்கும்
மாடி வீட்டுக்காரரே
தெய்வம் என்கிறான்.

*****

No comments:

Post a Comment

மூன்றில் ஒரு பங்கு விலையில் மடிக்கணினி!

மூன்றில் ஒரு பங்கு விலையில் மடிக்கணினி! திரிபுரசுந்தரம் ஓர் எழுத்தாளன். காப்பி நோட்டு எழுதித் தரச் சொன்னாலும், ரோக்கா போடச் சொன்னாலும், கவ...