23 Oct 2017

அரச கொடை

அரச கொடை
உணவில்லாத வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது பசி.
நீரில்லாத வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது தாகம்.
ஆடைகளில்லாத வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது நிர்வாணம்.
வீடில்லாத வேளையில்
நமக்குக்
கொடுக்கப்பட்டது பொட்டல்வெளி.
நமக்கு நம்
அரசுகளால்
கொடுக்கப்பட்டிருப்பது
மிக மிக அதிகம்தான்.

*****

No comments:

Post a Comment