24 Oct 2017

முதலாகி முடிவாகி நதியாகி

முதலாகி முடிவாகி நதியாகி
ஆதியில் மணல் இருந்த
நதியில்
மீன்கள், பாம்புகள், தவளைகள்
புழுக்களைத் தின்றன.
முடிவில் மணலற்ற நதியில்
புழுக்கள்
மீன்களை, பாம்புகளை, தவளைகளைத்
தின்றன.
கருப்புச் சாக்கடை நதியில்
தூண்டிலுக்குள் செருக
ஏராளமான புழுக்கள்
இருக்கின்றன
தூண்டில் போடுவதற்குத்தான்
மீன்கள் இல்லை.

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...