தெரு முக்கு விநாயகர் மன்னிப்பு கோரும் விண்ணப்பம்
ஆம்புலன்ஸ்
வர தாமதமாக
ஒரு டூவீலரில்
ஒட்டுவதற்கு
ஒருவர் உட்கார்ந்து கொண்டு
உயிருக்குப்
போராடும் அவரை நடுவில் இருத்தி
பின்னால் ஒருவர்
அமர்ந்து தாங்கிக் கொள்ள
மருத்துவமனை
நோக்கி செல்லும்
முன் - பின்
அமர்ந்திருக்கும் இருவரும்
சட்டம் ஒழுங்கை
மதிக்காத
தேவதூதர்களாக
தோற்றம் தருகிறார்கள்.
விரைந்து சென்று
கொண்டிருக்கும் அவர்களிடம்
வழியிடைபடும்
தெருமுக்கு விநாயகர்
மன்னிப்புக்
கேட்டுக் கொண்டிருக்கிறார்
விரைந்து வர
வைக்க முடியாத ஆம்புலன்ஸிற்காக.
*****
No comments:
Post a Comment