8 Jun 2017

புல்லாங்குழல் மனசு


புல்லாங்குழல் மனசு
கடைசிப் பேருந்தைத்
தவற விட்டவனின்
மன விசும்பல் போலிருக்கிறது
இயலாமையை எதுவும் செய்ய முடியாத
அந்தப் பொழுதுகளில்
திருவிழாவில் தொலைந்தவனின்
மனநிலையைப் போலிருக்கிறது
விஷேசங்களில் சமனின்மையைச்
சந்திக்கும் பொழுதுகளில்
ரங்க ராட்டினத்தின் உச்சியில்
ஏற்படும் பீதியைப் போலிருக்கிறது
எதிர்பாராமல் வந்து நிற்கும்
கடன் கொடுத்தவனைக்
கண்களால் பார்க்கும் பொழுதுகளில்
இவைகள் இல்லாவிட்டாலும்
வாழ்க்கை ருசிக்காது என்று
ஆறுதல் கொள்கிறது மனசு
எதிர்பாராமல் விழுந்து விட்ட துளைகளை
புல்லாங்குழலாய் மாற்றிக் கொள்பவனின்
மனநிலையைப் போல
*****
நன்றி - ஆனந்த விகடன் - 14.06.2017 இதழ் / பக்கம் - 65

No comments:

Post a Comment

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும்

கதை எழுதுதலும் ஆத்மாவைக் கொல்லுதலும் உண்மை பொய் ஏமாற்றம் நியாயம் எப்போதும் வெளியில் சொல்ல முடியாத ஒரு பட்டியல் இருக்கிறது ஏம...