26 Jun 2017

விற்று விட்ட நிலம்


விற்று விட்ட நிலம்
ஓலைக் குடிசைக்கு கூப்பிடு தூரத்தில்
தூக்கணாங்குருவி கூடு கட்டும்
தலைக்கு மேலே
உளவு பார்க்கும் விமானங்கள் போல
தட்டான்கள் பறந்து செல்லும்
நிமிர்ந்து நிற்கும் பனை, ஈச்சை
இரண்டும் பேசிக் கொண்டிருப்பது போல
பறவைகளொலி சலசலக்கும்
வளைந்த தென்னை இளநீர்க் குலையை
குளம் நடுவே நீட்டியிருக்கும்
வாழை குலை தள்ளி
அவரைப் பந்தல் மேல்
ஒரு குட்டுப் போட்டிருக்கும்
உம்பளச்சேரி காளைகள் ஒரு சிலுப்பு சிலுப்பி
கொம்புகளால் கீறி
நிலத்தை உழ முயற்சித்திருக்கும்
அதாகப்பட்டது, விற்று விட்ட நிலத்தில்
இப்படியும் நிகழ்ந்திருக்கும்
அல்லது
அவைகளெல்லாம் ப்ளாட்டாகி
இடமெல்லாம் ப்ளாட்டாக ஆவதும் நிகழ்ந்திருக்கும்!
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...