24 Jun 2017

தனிமை


தனிமை
தன் தனிமையைப் போக்கிக் கொள்ள
கூண்டுக்கிளியை வாங்கியவன்
கூண்டுக்கிளியின் தனிமையைப் போக்க
தன் சோகங்களைச் சொல்லத் தொடங்கினான்
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த
கூண்டுக்கிளிக்கு தன் தனிமை மேல்
முதன் முறையாக நேசம் தோன்றியிருக்கக் கூடும்
அதன் பின் அது பறந்து செல்ல முயற்சிக்கவில்லை
*****

No comments:

Post a Comment

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்!

என்ன வேண்டுமானாலும் செய்யும் அரசியல்! வாழ்க்கையில் என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று யாருக்காவது புரிகிறதா? அரசியலுக்கு வருவார் என்று நி...