27 May 2017

காட்டைத் தின்ற ஏப்பம்


காட்டைத் தின்ற ஏப்பம்
காட்டைத் தின்ற மனிதனின் ஏப்பம்
ஒரு சிங்கத்தின் அழுகுரல் போல் இருக்கும்
காட்டுத்தீயின் புகை போல் இருக்கும்
மலரின் துர்நாற்றம் போல் இருக்கும்
பச்சிலைகளின் மரணம் போல் இருக்கும்
ஏப்பத்திற்கான ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்டு
கூடவே இன்னொரு மாத்திரையை எடுத்துக் கொண்டால்
பட்டாம்பூச்சிகள் பறக்கும்
வனாந்திரத்தை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்
நம் சைபர் சஞ்சார உலகில்.
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...