1 Jun 2017

அதைத்தான் செய்வீர்கள்!


அதன் பின் பேசவில்லை
பாம்பின் வாய்க்குள்
போன தவளை
அதற்குப் பின் எதுவும் பேசவில்லை.
*****

அதைத்தான் செய்வீர்கள்!
அது துரதிர்ஷ்டத்தின்
மாபெரும் கல் என்று தெரியும்
அதை உங்களை நோக்கி
உருட்டி விடும் சாமர்த்தியம்
எனக்குத் தெரியும்
அதை உங்களுக்கான ஆபர் என்று சொல்வேன்
நீங்கள் நம்புவீர்கள்
நம்பித்தான் ஆக வேண்டும்
அதிர்ஷ்டத்தின் பிடியில் இருக்கும் நீங்கள்
பேரதிர்ஷ்டத்தைக் கனவு காண்பவர்களாகிய நீங்கள்
அதைத்தான் செய்வீர்கள்.
*****

No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...