கொலை சாட்சி
தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த எழுதப்
படிக்கத் தெரியாத முத்துக்கண்ணன் கையில் ஒரு கடிதம் இருந்தது.
*****
உயிர்ப் பிரிவு
எல்லாரும் செல்பி எடுத்துக் கொண்டு இருக்கும்
போதே பிரிந்தது தாத்தாவின் உயிர்.
*****
காட்டு எனக் காட்டல்
"சின்ன வயசுல நீ எடுத்துக்கிட்ட செல்பி
இருந்தா காட்டு!" என்றாள் பேத்தி பாட்டியிடம்.
*****
No comments:
Post a Comment