27 Mar 2017

உயர் பேச்சு


உயர் பேச்சு
அங்கங்கே கைவைத்து
எடுத்துச் சென்று விடும்
நூறையும், ஐநூறையும்
யாருக்கும் தெரியாமல்
மறைத்து விடும் அம்மா
எப்போதோ கொடுக்கும்
அஞ்சுக்கும் பத்துக்கும்
உயர்த்திப் பேசுவாள்
குடிகார அப்பனை.
*****

கேள்வி
பேசுவதெல்லாம் பொய்தான் என்று
தெரிந்த பின்னும்
கேட்டுக் கொண்டே இருந்தார்கள்
கொடுத்த ஐநூறுக்கு
பொய்முகங்களை வாங்கி
மாட்டிக் கொண்ட
மக்கள்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...