28 Mar 2017

நீங்க யாருடா?


விடுதல்
            கிராமத்துச் சொத்துகளை விற்க தன்னிடம் அனுமதி கேட்க வருகிறார்கள் என்பதை அறிந்த அப்பத்தா அதற்கு முன்னே மூச்சை விட்டாள்.
*****
கொஞ்ச காலம்
            "இது கொஞ்ச காலம்தான். கிராமத்து வயல்களை விற்று நகரத்துப் ப்ளாட்டுகளை வாங்குவாங்க. அப்புறம் நகரத்துப் ப்ளாட்டுகளை விற்று விட்டு கிராமத்து வயல்களை வாங்க வருவாங்க!" என்றார் கேன்சரால் சாவதற்கு முன் பரந்தாமன்.
*****
நீங்க யாருடா?
            "எங்கள மணல் அள்ளக்கூடாதுன்னு தடுக்குறதுக்கு நீங்க யாருடா?" என்றனர் உள்ளூர்வாசிகளைப் பார்த்து வெளியூர்லேர்ந்து மணல் அள்ள வந்த லாரிக்காரர்கள்.
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...