கடவுளே!
"எல்லாத்தையும் மேல ஒருத்தன் பார்த்துகிட்டு
இருக்கான்!" என்று புலம்பிக் கொண்டே போனவனுக்குத் தெரியுமோ, தெரியாதோ அது
கண்காணிப்புக் கேமிரா என்று.
*****
கஷ்டம்
ஏ.டி.எம்.மில் கத்தை கத்தையாகப் பணம் நிரப்புபவர்க்கு
இருக்கக் கூடும் பணக் கஷ்டம்.
*****
வாசகம்
"குடிநீரை வீணாக்காதீர்கள்!" என்று
எழுதப்பட்டிருந்த சுவரை உடைத்துக் கொண்டு ஓடியது வெள்ளம்.
*****
கொலை
"நம்மள போட்டுத் தள்ள முடிவு பண்ணிட்டாங்க!"
என்று ஆனந்தி சொல்ல, "நம்ம காதல் உங்க வீட்டுல தெரிஞ்சுடுச்சா?" என்றான்
இளவரசன்.
*****
No comments:
Post a Comment