15 Jan 2017

வெறுங்கூடு


ஒரு குளம்
ஒரு குளத்தில்
இருக்கின்றன
நீந்தத் தெரிந்த
மீன்களும்
நீந்தத் தெரியாத
தாமரைகளும்!
*****

வெறுங்கூடு
சேரத்து வைத்த
கூட்டில்
முட்டைகளுமில்லை
தேனுமில்லை
கூடு நிறைய
இறைந்து கிடக்கின்றன
ஏமாற்றுக்காரர்கள்
தவற விட்டுப் போன
கைரேகைகள்!
*****

கனிதல்
கரடு முரடான
பாதைகளை
வேர்கள்
கடந்து சென்ற பின்
கனிந்து குலுங்குகிறது
மரம்!
*****

No comments:

Post a Comment