சந்தோசம்
கிடைத்தால்
சந்தோசம் என்க
கிடைக்காவிட்டால்
அதை விட சந்தோசம் என்க
கிடைத்தால்
ஆர்வத்தோடு செய்க
கிடைக்காவிட்டால்
அதை செய்ய
வாய்ப்பின்றி போவதாகுக
பிடித்ததைச்
செய்ய வாய்ப்பு கிடைத்ததாகுக
*****
குருநாதர்கள்
சில
முட்டாள்களை நம்பி
ஏமாறக்
கூடாது என்ற பாடத்தை
ஏமாற்றும்
முட்டாள்கள்தான் கொடுக்க முடியும்
உன்னதமான
பாடங்களை
வழங்கிச்
செல்லும் அவர்கள்
மகத்தான
குருநாதர்களைப் போல!
*****
மணல் வரலாறு
அள்ளிக்
கொண்டு போவார்கள்
என்று
தெரிந்தும்
ஆண்டுதோறும்
அடித்துக்
கொண்டு வருகிறது
ஆறு
மணலை!
*****
No comments:
Post a Comment