1 Feb 2017

எப்போது புரிந்து கொள்வாய்?


எப்போது புரிந்து கொள்வாய்?
இரண்டில் ஒன்றை
சொல் என்கின்றாய்.
இரண்டில் ஒன்றையும்
எதையும்
சொல்லாமல் இருப்பதும்
என் உரிமை
என்பதை
எப்போது நீ
புரிந்து கொள்வாய்?
*****

சுடுதல்
பறவைகளைப் பார்த்தால்
சுடத் தோன்றுகிறது
துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவருக்கு!
துப்பாக்கி வைத்திருப்பவரைப்
பார்த்தால்
சுடத் தோன்றுகிறது
துப்பாக்கி இல்லாத எனக்கு!
கெளதாரியை
எரியும் தணலில்
சுட்டுக் கொண்டிருக்கிறான்
எங்களைப் போல்
சுடுதலை
வெறும் எண்ணமாய் மட்டும்
வைத்திராத
இளந்தாரிப் பயல் ஒருவன்!
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...