சரக்குகள்
சாசுவதமாய்
இல்லை
என்பதற்காக
அரை கிலோ
அன்பையும்
பத்தரை
கிலோ பாசத்தையும்
கடையில்
வாங்கிக் கொண்டேன்!
விலைதான்
அதிகமாய்ச்
சொல்லப்பட்டது!
பணவீக்கத்தோடு
ஒப்பிடுகையில்
வாங்கி
வைத்தால்
பிற்காலத்தில்
நல்ல
விலை போகும்
வாங்கி
வைத்த
அன்பும்
பாசமும்!
*****
விருப்பங்கள்
குளத்திற்குள்ளோ
அதற்கு
வெளியோ
அது
தவளைகளின்
விருப்பம்!
குளமா
அது
கூறு
போட வேண்டிய
நிலமா
என்பது
அங்கே
தவளைகளை
வாழ விடும்
மனிதர்களின்
விருப்பம்!
*****
No comments:
Post a Comment