அழகான கவிதை
மனதை
விட்டு
வெளிவர
மறுக்கும்
அந்தக்
கவிதையே
ஆகச்
சிறந்த
கவிதையாகப்
படுகிறது
ஒரு குழந்தையின்
பிடிவாதத்தைப்
போல!
*****
வாசனை
அப்பத்தா
காலத்து
வாசனையை
மணமணக்கச்
செய்கிறது
வீடு
முழுவதும்
அம்மியைத்
தேட வைத்து
அரைக்கச்
செய்த
மின்வெட்டுப்
பொழுது!
*****
கஷ்ட ஜீவனம்
பிள்ளைக்கொரு
பென்சில்
வாங்கித்
தர முடியாத
கஷ்ட
ஜீவனத்தோடு போராடுகிறார்
ராவானதும்
ராவாக
குவார்ட்டரோ,
ஆப்போ, புல்லோ
போட்டு
வரும் அப்பா!
*****
No comments:
Post a Comment