29 Dec 2016

ரெண்டாயிரம் நோட்டுகள் கசிந்தது எப்படி?


ரெண்டாயிரம் நோட்டுகள் கசிந்தது எப்படி?
            "புதிய ரெண்டாயிரம் நோட்டுகள் எப்படி வெளியே கசிகின்றன?" என்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சமத்து ஜம்புலிங்கமும் அவரது புலனாய்வு அறிவினை கருத்தில் கொண்டு அழைக்கப்பட்டு இருந்தார்.
            ரிசர்வ் பேங்க், கருவூலம், பேங்க் - இந்த மூன்று இடங்களில்தான் கசிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
            அப்போது, அனைவரும் அமைதியாக ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்து இருந்து சமத்து சம்புலிங்கத்தைப் பார்த்தனர்.
            சமத்து சம்புலிங்கம் எழுந்தார், "கண்டெய்னர் லாரியில், ரயிலில், விமானத்தில் அந்தப் பணத்தைக் கொண்டு செல்லும் போது ஓட்டை விழுந்துதான் கசிந்திருக்க வேண்டும்!"
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...