20 Oct 2016

திருஷ்டி


முடிவில்   
பயணங்களின் முடிவில்
கற்றதும் பெற்றதும்,
நசுங்கிய நத்தைகள்
சிறகொடிந்த
பட்டாம் பூச்சிகள்!
*****

சிறுகுறிப்பு        
உன் சிறப்பின்
சிறுகுறிப்பு
என்னவென்றால்
நிற்கும் போது
பூ
நடக்கும் போது
தென்றல்
நீ!
***
இப்படித்தான்
நீ என
தெளியும் போது
இப்படியல்ல நான்
என்று
குழப்பி விட்டுப் போவாய்
சின்ன குறும்போடும்
செல்ல சிரிப்போடும்!
*****

திருஷ்டி    
சுத்தம்
தூய்மை
சுகாதாரம்
நடுரோட்டில் உடையும்
திருஷ்டிப் பூசணிக்காய்!
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...