16 Jul 2025

நெஞ்சாற்றுப்படை

நெஞ்சாற்றுப்படை

பலருக்கும் ரத்தத்தைப் பார்த்தால் பயம்

இது தெரியாமலா

கண்ணுக்குத் தெரியாமல்

தோலுக்குள் ஓட விட்டிருப்பார் கடவுள்

*

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்

கவிதைக்கு விளக்கம் சொல்வதைத் தவிர

*

நல்ல நேரத்தில் கவிதை

காட்டாறாய் கிளம்புகிறது

மனைவி வந்துவிடுகிறார்

திட்டித் தீர்ப்பதற்கு

பாவம் கவிதை

வாசல் வரை வந்து

அவமானப்பட்டுத் திரும்புகிறது

மதியாதார் தலைவாசல்

இனி மிதியுமோ கவிதை

*

மழையில் நனைவது பிடிக்கும் என்றாய்

சரி நனைந்து தொலை என்றேன்

மறுநாளே ஜலதோசம் என வந்து நிற்கிறாய்

*

கவுண்டமணி

வடிவேலு

சந்தானம் இல்லாத குறையை

அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள்

*****

No comments:

Post a Comment