12 Jan 2025

காட்டுத்தீப் போல பரவும் பேச்சு

காட்டுத்தீப் போல பரவும் பேச்சு

நடுரோட்டில் உலாத்திக் கொண்டு

தெருவோரத்தில் துயில் கொள்ளும்

நாய்க்கு நான்கு குட்டிகள் பிறந்தன

அழகான குட்டிகள் இரண்டு

அசிங்கமான குட்டிகள் இரண்டு

நான்காவது நாளில்

அழகான குட்டிகள் இரண்டும் காணாமல் போயின

அசிங்கமான குட்டிகள் இரண்டும்

தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்தன

காட்டுத்தீ போலப் பரவிய செய்தி கேட்டு

அழகான குட்டிகள் இரண்டும்

அதிர்ஷ்டம் செய்தவை என்று பேசிக் கொண்டனர்

தாய்ப்பால் குடிக்க

அசிங்கமாய்ப் பிறக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் போல

என்பதைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...