29 Jan 2023

சொல்ல முடியாத வார்த்தைகள்

சொல்ல முடியாத வார்த்தைகள்

நீ என்னை நல்லவன் என்று சொன்ன போது

முதன் முதலாகச் சிரித்தேன்

பிறகு நீ என்னைக் கேட்டவன் என்று சொன்ன போது

இரவு முழுவதும் விழித்திருந்துக் குடித்தேன்

மறுநாள் முழுவதும் போதை மயக்கத்தில் கிடந்து

அதற்கடுத்த நாள் கண் விழித்த போது

நீ என்னை நல்லவன் என்று சொன்ன போது

எனக்கு நான் எப்படி இருந்தேன் என்று கேட்டேன்

அப்படியே

நீ என்னைக் கெட்டவன் என்று சொன்ன போது

எனக்கு நான் எப்படி இருந்தேன் என்று கேட்டேன்

நான் எப்போதும் போல

மாறிக் கொண்டுதான் இருந்தேன்

இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்

எப்போதும் அப்படித்தான் இருக்கப் போகிறேன்

நல்லவன் என்று சொல்வதற்காக நல்லவனாகவோ

கெட்டவன் என்று சொல்வதற்காக கெட்டவனாகவோ

நீ நினைப்பது போலல்ல

நான் நினைத்தாலும் அப்படியெல்லாம் இருக்க முடியாது

எப்போது வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் இருப்பவனை

யார் சொல்லி எப்படி அடையாளப்படுத்த முடியும்

இப்போதெல்லாம்

நான் சிரிப்பதற்கான வார்த்தைகளை யாராலும் சொல்ல முடிவதில்லை

அத்துடன் குடிப்பதற்கான வார்த்தைகளையும்தான்

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...