24 Dec 2022

ஓடிப் போய் விடு என்றார் குரு

பிராப்தம்

வாழைப்பழம் ஒன்றை

பிச்சை கேட்கிறது

கோயில் மண்டபத்துக் குரங்கு

*****

ஒரு கவிதை சொல்

ஒரு கவிதை சொல் என்றாய்

அதற்கென்ன சரக்கின் இருப்பு நிறைய இருக்கிறது

எடுத்துக் கொள் ஒன்றை

தெரிந்தா செய்கிறேன்

தெரிந்தால் செய்ய விடுவாயா

*****

ஓடிப் போய் விடு என்றார் குரு

உன்னை இழந்து சரணாகதி அடை என்றார்.

உங்கள் அடிமையாகவா என்றேன்.

ஓடி போய் விடு என்றார் குரு.

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...