27 Nov 2022

ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் நிற்கிறாள்!

ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் நிற்கிறாள்!

மனைவி ஏன் முந்திக் கொண்டு பதில் சொல்கிறார் எனக்குத் தெரியவில்லை.

பொதுவாக மனைவிகள் ஏன் முந்திக் கொண்டு பதில் சொல்கிறார்கள் என்று கேட்டால் இந்தப் பிரச்சனைக்குள் நீங்களும் (ஆண்கள்) வந்து விடுவீர்கள்.

மனைவியாக ஆகி விட்டதன் அடையாளமாகவும் அது இருக்கலாம்.

குறிப்பாக அதில் பல சௌகரியங்கள் இருப்பது கவனிக்க வேண்டியது. நான் கவனித்தது இந்த நான்கு சௌகரியங்கள். இன்னும் பல சௌகரியங்கள் இருக்கலாம். அதை நீங்கள் சொன்னால்தான் நான் தெரிந்து கொள்ள முடியும்.

1.      அநாவசியமாக எல்லாவற்றுக்கும் நாமே யோசித்துக் களைப்படைய வேண்டியதில்லை.

2.      அவசரப்பட்டுப் பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடியில்லை.

3.      நன்கொடை, வசூல் என்று நம்மை (ஆண்களை) நோக்கி யாரும் அடி வைக்க மாட்டார்கள்.

4.      செய்வினை, கொள்வினைகளில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிற்க வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் மனைவியின் பின்னால் நின்று கொள்ளலாம்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்களே, என்னைக் கேட்டால் ஓர் ஆணின் வெற்றிக்கு முன்னால் ஒரு பெண்தான் நிற்கிறாள் என்று சொல்வேன்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...