29 Dec 2018

ஒரு ஆப் பாயில் பிரச்சனை


இட்லி மாவு அரைக்க விலையில்லா கிரைண்டர் கொடுத்தவர் ஜெயலலிதா. அதுவும் போதாது என்று அம்மா உணவகம் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்தவர் அவர். அவருக்கே ஒரு கோடிக்கு இட்லி வித்திருக்கிறார்கள் என்றால்... அந்த இட்லி பல டெஸ்டுகளுக்கு உட்பட்ட லேபரட்டரியில் தயாரான இட்லியாகத்தான் இருக்கும். நம் நாட்டில் மருந்துகளும் விலை கூடுதல். மருத்துவமனையில் தயாராகும் இட்லிகளும் விலை கூடுதல்.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்க அய்யா என்றால்... விவசாயத்தையே தள்ளுபடி பண்ணிடுவாங்க போலிருக்க மக்கா!
விவசாயத்தை அழிச்சுபுட்டு ப்ளாஸ்டிக் சோற்றைத் தின்ன வெச்சு புடுவாங்க போலிருக்க என் ஆத்தே!
ஆத்தே! நீ ப்ளாஸ்டிக் பீடிங் பாட்டில்ல ஊட்டுன பால் எல்லாம் ப்ளாஸ்டிக் சோற்றை அள்ளிப் போட்டு திங்கத்தானா ஆத்தே!

கட்சி ஆரம்பித்த பிறகு புயல் பாதித்த இடங்களுக்குச் செல்வேன்னு சொல்றாரே சாமியோவ்! இவர் கட்சி ஆரம்பித்த உடனே புயல் அடிக்கணும்னு சொல்ற மாதிரில்லா இருக்கு!

ஒரு ஆப் பாயில் பிரச்சனைதான். சிலிர்த்து எழுந்து போலீஸாக இருக்கும் விஷ்ணு விஷால் பல நாட்கள் தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் பிரபல ரெளடியை அரெஸ்ட் செய்து விடுகிறார். இந்த ஆப் பாயில் பிரச்சனை நன்றாக இருக்கிறது. இப்படி நிறைய ஆப் பாயில் பிரச்சனைகள் வந்து தமிழ்நாட்டில் பிரபல ரெளடிகள் அரெஸ்ட் ஆனால் நல்லதுதான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கா? இந்தப் பிரச்சனையை நீங்கள் விரிவாகப் புரிந்து கொள்ள சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தைப் பாருங்கள். மேலும் இந்தப் பிரச்சனையை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள வாட்ஸ் அப்பில் அள்ளு விட்ட ரெளடிகளின் சரித்திரங்களையெல்லாம் பார்க்க வேண்டும்.
*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...